Header Ads

சாணக்கியர் நீதியும், சந்திர குப்த மன்னரின் சரித்திர வாழ்க்கையும்!

சந்திர குப்த மன்னர் தனது வீரத்தாலும் நல்ல ஆளுமையினாலும் இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்தார். உண்மையில் அவர் தான் இந்தியாவின் முதல் பேரரசர் என்றே சொல்லலாம். கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவார் என்று யாரும் அறிந்திருக்கவில்லை. அவ்வாறு அவர் உருவானதற்கு சாணக்கியரின் பங்கும் பெரிதாய் இருந்தது. அப்படிப்பட்ட பேரரசரையும் அவருடைய சொந்த வாழ்க்கையையும் தான் நாம் பார்க்க போகிறோம்!

​சந்திரகுப்த மௌரியர் மற்றும் நந்தினியின் உண்மை கதை

ஒவ்வொரு வரலாற்றுக் கதையின் பின்புலத்திலும் நாம் கேள்விப்படாத கடின உழைப்பு ஒன்று இருக்கும். அந்த உழைப்பிற்கு ஒருவரின் வாழ்க்கையைச் சரித்திர கதையாக மாற்றும் சக்தியும் இருக்கும். அதுபோன்ற ஒரு கதை இந்திய வரலாற்றின் முக்கிய ஆளுமையை விளக்குகிறது. அது தற்போதைய இந்தியாவின் வடக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளைத் தனதாக்கிக் கொண்டதனாலும் ஒரு பேரரசை நிறுவிய திறமையினாலும் தனிச்சிறப்பைப் பெற்ற சந்திர குப்த மௌரியரின் வரலாற்று கதை.

சந்திரகுப்த மௌரியர்

சந்திர குப்த மௌரியரின் வாழ்க்கை பயணத்தைப் பற்றியும் மௌரிய பேரரசின் எழுச்சியைப் பற்றியும் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. ஒரு தெருவில் திரிந்த சிறுவன் சாணக்கியரால் பேரரசனாக உருமாறியதை அறிந்திருப்போம். ஆனால் யாரும் அறியாத ரகசியமாய் இருப்பது சந்திர குப்தரின் பிறப்பும் அவரின் குலத்தைப் பற்றியும் தான். இன்று வரை அது மர்மமாகவே உள்ளது.

பண்டைய நூல்கள்

மௌரிய வம்சத்தைப் பற்றி விளக்கும் பல வரலாற்று இலக்கியப் படைப்புகள் தெளிவற்ற வெளிச்சத்தையே கொண்டிருக்கின்றன. அதாவது அவர்களைப் பற்றிய உண்மைகளை உறுதி செய்யும் எந்த வலுவான குறிப்புகளும் கிடைக்கவில்லை.

தலைமுறையின் தடயங்கள்

இது உண்மையில் சந்திரகுப்தரின் பிறப்பு மற்றும் தலைமுறையைப் பற்றிய ஒன்றாகும். சமீபத்திய தொலைக்காட்சித் தொடர்கள் அவரை அரச குடும்பத்தின் வழி வந்தவர் என காட்சிப்படுத்தின. ஆனால் உண்மை அப்படியாக இருக்கவில்லை. உண்மையில் சூர்ய குப்தர் மற்றும் அவரது மனைவி மூராவிற்கு மகனாக சந்திர குப்தர் பிறந்தார்.

 

சந்திர குப்தரின் பிறப்பு

நந்த பேரரசின் அரசராக இருந்த சூர்ய குப்தரை மகானந்தர் என்பவர் ஏமாற்றி கொன்றுவிட்டு அந்த அரியணையில் புதிய மன்னராக பதவி ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு சூரிய குப்தரின் மனைவி உள்ளூரில் இருந்த அடர்ந்த காட்டில் தஞ்சமடைந்து சந்திர குப்தனைப் பெற்றெடுத்தார்.

சந்திர குப்தருடன் சாணக்கியர் சந்திப்பு

அவரது தொடக்க காலங்களில் அவருடைய குடும்பப் பெயரான குப்தர் என்பது இல்லாமல் வெறும் சந்திரனாகவே வளர்க்கப்பட்டார். அவருடைய அடையாளத்தை மறைத்து வைத்திருந்தார். இதற்கிடையில் சாணக்கியர் தந்த அரசரின் அவையில் அரசின் ஆலோசகராக பணியாற்றி இருந்தார். அப்போது அரசரின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் மீது நிகழ்த்தும் கொடுஞ்செயல்களால் கோபமடைந்தார்.

​​​​சாணக்கியரின் கோபம்

சாணக்கியரின் கோபம்

நந்த மன்னர் செல்வத்துக்காகவும் தனது அதிகாரத்தை விரிவுப்படுத்துவதற்காகவும் இந்திய மண்ணில் வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்பை அனுமதிப்பதற்கு ஆவலாக இருப்பதை சாணக்கியர் அறிந்திருந்தார். இதனால் அவர் இவை மக்களுக்கு செய்யும் துரோகம் என மன்னரை எச்சரித்தார். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் தனது பதவியைப் பறிப்பதாக மன்னர் அச்சுறுத்தினார்.

மன்னர் தன நந்தன்

ஒருமுறை மன்னரால் தனது அறிவு மற்றும் ஞானத்திற்கு ஏற்பட்ட சவாலால் சாணக்கியர் தனது அரசப் பதவியை விட்டு வெளியேறி அருகிலிலுள்ள ஒரு கிராமத்தில் குடியேறி அங்கு சொந்தமாக குருகுலம் ஒன்றைத் தொடங்கினார். இந்த காலகட்டத்தில்தான் அவர் ஒரு துணிச்சலான கிராமத்து சிறுவனைக் கண்டார். அந்த சிறுவனது அறிவு, அச்சமின்மை மற்றும் நீதியான அணுகுமுறை ஆகியவற்றைக் கண்டு ஆச்சரியமடைந்தார். அந்த சிறுவன் தான் சந்திரன்.

சாணக்கியர் மற்றும் சந்திர குப்தர்

நாம் எல்லோரும் அறிந்தபடி சாணக்கியர் சந்திர குப்தரின் திறமைகளைக் கொண்டு அவருக்கு நன்கு பயிற்சி அளித்தார். மௌரியப் பேரரசு உருவாகுவதற்கு அந்த பயிற்சி பெரும் பங்கு வகித்தது. அந்த பேரரசு ஒருநாள் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக அறியப்பட்டது.

பிரமாண்ட​​ அரசாங்கத்தை உருவாக்கிய சந்திர குப்தர்

அயலக படையெடுப்பு

அலெக்சாண்டரின் மாபெரும் இராணுவத்தின் அச்சுறுத்தும் செயல்களை சாணக்கியர் நன்கு அறிந்திருந்தார். அதனால் சந்திர குப்தர் தானே ஒரு படை வீரனாக அலெக்சாண்டரின் படையில் சேர்ந்தார்‌‌. அங்கு ஒரு கொடூரமான இந்தியப் படை பிரிவை ஊடுருவ செய்தார். அந்த படையிடம் அலெக்சாண்டரின் படையினரால் வெல்ல முடியவில்லை. இது வரலாற்றின் புகழ்மிக்க தருணத்தை உருவாக்கியது. பின்பு அலெக்சாண்டர் இந்திய தேடலை கைவிடும்படி படையினரிடம் கோரிக்கை வைத்தார்‌.

அரசாங்கத்தை உருவாக்குதல்

அடுத்து சாணக்கியர் சந்திர குப்தரை ஒரு திறமையானவராக, நல்லாட்சியை வழங்கும் சிறந்த ஆளுமைமிக்கவராக உருவாக்கினார்.‌ சந்திர குப்தர் இளைஞர்களைத் திரட்டி மௌரிய பேரரசைக் கட்டமைக்க ஒரு படையை உருவாக்கினார்.

நந்த பேரரசை வெற்றி கொள்தல்

திரண்ட இளைஞர்களைக் கொண்டு உருவாக்கிய படையுடன் சாணக்கியரின் பயிற்சியைக் கொண்டு சந்திர குப்தர் தன நந்த மன்னரிடம் போரிட்டு நாட்டை கைப்பற்றி அதனை மௌரியப் பேரரசின் கீழ் கொண்டு வந்தார். மேலும் சந்திரகுப்தர் நந்த மன்னரின் மகளான நந்தினியைத் திருமணம் செய்து கொண்டார் என்ற கருத்து முற்றிலும் பொய்யான தகவல்.

 

​​​துர்தாராவின் மரணம் மற்றும் பிந்துசாராவின் பிறப்பு

துர்தாராவின் மரணம் மற்றும் பிந்துசாராவின் பிறப்பு

உண்மையில் சந்திர குப்த மௌரியர் தனது தாய்வழி உறவில் தூரத்து சொந்தமான ஒரு மூத்த மாமாவின் மகளான துரதாராவை மணந்தார்‌. மௌரிய அரசு எப்போதும் எதிரிகளால் சூழப்பட்டது. அதனால் சந்திர குப்தருக்கு எந்நேரத்திலும் உணவில் விஷம் வைக்கக்கூடும். அவ்வாறு வைத்தாலும் அவர் மரணிக்காமல் இருக்க தினமும் சிறிது சிறிதாக உணவில் விஷத்தைச் சேர்த்து உண்டு தன்னை விஷத்திற்குப் பழக்கப்படுத்தி கொண்டார். அதன் அளவு சிறிது காலத்தில் ஆளைக் கொல்லும் அளவிற்கு வந்தது ஆனாலும் அவரை அது பாதிக்கவில்லை. இது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இருந்தது. அவ்வாறு ஒரு நாள் அவருக்கு வைத்த உணவை அவருடைய மனைவி துரதாரா தெரியாமல் உண்டுவிட்டார். அந்த நேரத்தில் அவர் கர்ப்பமாக வேறு இருந்தார். அந்த விஷத்தால் அவர் இறந்த பின்பு மௌரிய பேரரசின் வாரிசான பிந்துசாராவைப் பெற்றெடுத்தார்.

 

இரண்டாவது மனைவி- ராணி ஹெலெனா

பிந்துசாரா அரசின் பணிகளை நன்கு கவனித்து வந்தார். சாணக்கியரின் வழிகாட்டுதலில் சந்திரகுப்தர் ஹெலெனாவின் தந்தையைப் போரில் தோற்கடித்து பின்பு அரசி ஹெலெனாவை மணந்தார். இந்த திருமணத்தால் வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்தவும், இந்திய நிலத்தில் வெளிநாட்டு படையெடுப்புகளைக் கட்டுப்படுத்தவும் சந்திர குப்தர் ஹெலெனாவை மணந்தார்.

Title:

Schools Have More Severely Disturbed Students– What ‘s A Teacher To Do? Word Count: 1094 Summary: Teachers and Counselors: Does it seem to y...

Translate

Powered by Blogger.